Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாதுகாப்பான நாடுகள் பட்டியல்! இந்தியாவை விட பாதுகாப்பான நாடாக இலங்கை, பாகிஸ்தான்?

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?

 

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியாமுன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீடு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்பியோ தரவுத்தளம் வெளியிடும் இந்த பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடான அன்டோரா, இந்தாண்டின் உலகின் மிகப் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்டோராவுக்கு அடுத்த இடத்தில, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவை விட பாதுகாப்பான நாடாக இலங்கை, பாகிஸ்தான்?

ஆசிய நாடுகளில் குறிப்பிடும்படியாக சீனா 76.0 புள்ளிகள் பெற்று 15-வது இடத்தில் உள்ளது. அதேபோல, இலங்கை 59-வது இடத்தினை பிடித்துள்ளது. சுவாரசியமாக, பாகிஸ்தான், இந்தியாவை விட ஒரு இடம் முன்னேறி 65-வது இடத்தில் உள்ளது. அதே நிலையில், பங்களாதேஷ் 126-வது இடத்தில் உள்ளது என அந்த பட்டியல் கூறுகிறது. பட்டியலில், வெனிசுலா, 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்து உலகின் மிகவும் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல குறைவான புள்ளிகளை பெற்று, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா மற்றும் பெரு ஆகியன பாதுகாப்பற்ற நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விரிவான தகவலுக்காக, நம்பியோ இணையதளத்தை (www.numbeo.com) (http://www.numbeo.com) பார்வையிடலாம்.

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியாமுன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீடு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்பியோ தரவுத்தளம் வெளியிடும் இந்த பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடான அன்டோரா, இந்தாண்டின் உலகின் மிகப் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்டோராவுக்கு அடுத்த இடத்தில, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.