நீதிமன்ற உத்தியோகத்தர்கள், அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியவர்கள் - விநாயகமூர்த்தி ராம கண்ணன்.
குறிப்பாக நீதிமன்றத்தினை நாடி வருபவர்கள், அவர்கள் விருப்பத்துடன் நீதிமன்றத்துக்கு வருவதில்லை.
நீதிமன்ற உத்தியோகத்தர்கள், அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியவர்கள் என்பதனை நிறைவேற்றி காட்டி உள்ளனர்.
தற்போது உள்ள நீதி அமைச்சு நீதிமன்றங்களில் உள்ள சான்று பொருட்கள் ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்றங்களில் இருக்கக் கூடாது என்று சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்பொழுது நீதிமன்றங்களில் சான்று பெருட்கள் ஒரு வருடத்திற்குள் வழக்குகள் முடிக்கப்பட்டு, அழிக்கப்பட வேண்டிய பொருட்கள் அழிக்கப்பட்டும், ஏனை பொருட்கள் நீதிமன்ற நடவடிக்கை மூலம் அவை ஏல விற்பனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றங்களில் இருந்து அவை இல்லாமல் செய்யப்படுகின்றன.
இதற்கு அரச உத்தியோகத்தர்களின் வினைத்திறனான செயல்பாடே காரணம்.
எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் ஆகிய நீங்கள், உங்களுடைய கடமைகளை அர்ப்பணிப்புடன், செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு தெரிவித்தார், வட மாகாண மேல் முறையிட்டு குடியியல் நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி ராம கண்ணன்.
ஆண்டின் முதல் தொடக்க நாளான நேற்றைய தினம் (1)அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணமும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக நீதிமன்றத்தினை நாடி வருபவர்கள், அவர்கள் விருப்பத்துடன் நீதிமன்றத்துக்கு வருவதில்லை.
துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் நீதிமன்ற சேவையினை பெற வேண்டியவர்களுக்கு ஆளாகின்றனர்.
அவ்வாறு வரும் போது மக்களை நீங்கள், அன்பாக அரவணைத்து அவர்களுடைய முகம் கோனாத வகையில், அவர்களுடைய சேவைகளை விரைவாக வழங்க வேண்டும் என்பதை நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு வரும் பொதுமக்கள் எவ்வளவோ வறுமைக்கு மத்தியில் வருகின்றார்கள். உள ரீதியான கஷ்டம், பணரீதியான கஷ்டம், போன்ற பல்வேறு சுமைகளுடன் வருகின்றவர்களை நாங்கள் அதிகார தொணியில், கதைப்பதனையும் அவர்களை அலட்சியப்படுத்துவதனையும், தவித்துக் கொள்ள வேண்டும்.
இந்த நீதிமன்றத்திற்கு வருபவர்கள் எவ்வாறு மனக்கசப்பு உள்ளாகி வருகின்றார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் அனைவரும் நீதிமன்ற சேவையினை பெற்றுக்கொள்ள வருகின்றபோது மக்களுக்கு உங்களால் ஆன உதவியினை வினைத்திறனுடன் செயல்படுத்த வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன்.
கடந்த காலம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது அரச உத்தியோர்கள் மிகவும் வினைத்திறனுடன் செயல்பட்டு இந்த நாட்டை மீளவும் கட்டி எடுப்பதற்கு அவர்கள் பணிபுரிந்துள்ளார்கள் என்பதனை காணக்கூடியதாக இருந்தது என நீதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.


