Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொதுஜன பெரமுனவுக்குள் கடும் பிளவு: வெளியேறும் முக்கிய புள்ளி – தடுமாறும் மகிந்த, பசில்

.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னமும் முடிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு அக்கட்சி முகங்கொடுத்துள்ளதால் கட்சிக்குள் மூன்று குழுக்கள் உருவாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ரணிலோ அல்லது வேறு எவராக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் சார்பில் அவர் களமிறக்கப்பட வேண்டுமென ஒரு தரப்பினரும், பொதுஜன பெரமனவின் உறுப்பினர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென மற்றுமொரு தரப்பினரும் இயங்கி வருகின்றனர்.

இவர்களை கட்டுப்படுத்த முடியாது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் தடுமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, ”ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாட்டை மீட்டெடுத்த தலைவராக அவர் உள்ளார்.

பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாடும் அதுதான். ஆகவே, ரணிலை வேட்பாளராக நிறுத்தும் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் முழுமையாக ஆதரவளிப்பேன்.

அதேபோன்று அவரை வேட்பாளராக நிறுத்த மறுத்தால் அக்கட்சியிலிருந்து வெளியேறி ரணிலை ஆதரிக்கவும் தயாராக உள்ளேன்.”என்றார்.