பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடங்கியுள்ளது!
பாகிஸ்தான் சியால் கோட் பகுதியில் இந்தியா எதிர் தாக்குதல் தொடங்கியுள்ளது.

தற்போது பிரதமர் மோடி இராணுவ பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றார்.
* இந்தியா -பாக் போர் பதற்றத்தை தொடர்ந்து இவ்வாண்டு நடைபெற்று வருகின்ற IPL போட்டித் தொடரை ஒத்திவைக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
* டெல்லியில் அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டு உடன் பணிக்கு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
* பாகிஸ்த்தான் லாகூர் நகரில் இந்திய இராணுவம் ஏவுகணை தாக்குதலை தற்சமயம் நடத்திவருகின்றது.
* ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய நகரங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைக, ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது..
இந்திய தரப்பில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் பாகிஸ்தான் விமானி கைது. F16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் விமானி கைது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன .
* இந்திய வெளியுறச் செயலாளர் ஜெய்ஷங்கரரை அவசரமாக தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க உள்துறை செயலர், பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் இந்தியா பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆதரவளிப்பதாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.
* இந்தியத் தாக்குதலைத் தொடந்து பாகிஸ்தான் முழுவதும் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வீட்டின் அருகே பெரிய குண்டுவெடிப்பு நடைபெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது.
* பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் வீட்டின் அருகிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.
* கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான "ஐஎன்எஸ் விக்ரந்த்" களம் இறங்கியது.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள இந்தக் கப்பலில் இருந்து, கராச்சி துறைமுகம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
* பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் வீட்டின் அருகே பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றதாக தகவல், பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர் வீட்டின் அருகிலும் குண்டு வெடிப்பு என தகவல், பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் என்றும் தகவல்.
இந்தியாவில் 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* ஜம்மு, லே, சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு.
* பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
* தற்போது காஷ்மீரில் ரஜோரி, சம்பா மாவட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே உக்கிர மோதல் நடைபெற்று வருகின்றது.
* இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
* இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க மத்திய அரசு வலிவுறுத்தியுள்ளது.
* பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
* பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருதி பாகிஸ்தான் பிரதமர் இரகசிய நிலக்கீழ் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாகிஸ்தான் விமானி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் உயிருடன் சிக்கினார்.
* ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* பாகிஸ்தானின் அத்துமீறலை அடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
* ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை; பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
* ஐபிஎல் போட்டியின் மீதப்போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்கவுள்ளது. இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ளன; மீதமுள்ள போட்டிகள் குறித்து நாளை முடிவு.