Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

விவசாய அபிவிருத்தி திணைக்களம்: பயிரிடப்படாத வயல் காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள திட்டம்.

.

பயிரிடப்படாத ஒரு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான வயல் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

''பிடியளவு கமநிலத்திற்கு'' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயிரிடப்படாத வயல் காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் திட்டத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹண ராஜபக்ஸ தெரிவித்தார்.

குறித்த வயல் காணிகளில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சில காணிகளை நெற்பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தவும் காணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வேறு பயிர்ச்செய்கைகளுக்காக சில காணிகளை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

அனைத்து காணிகளிலும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான இயலுமையை ஏற்படுத்துவதற்காக காணிகளின் உரிமையாளர்களை தௌிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹண ராஜபக்ஸ தெரிவித்தார்.