Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு!

.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் நேற்று கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. 

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே கட்டார் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் பகிரங்கமாக தெரிவித்திருந்தது. 

இரு தரப்புக்கும் இடையிலான பதிலடித் தாக்குதல்கள் மோசமடைந்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.  

இந்த நிலையிலேயே கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.