Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலை ஆதரித்தவர்கள் நீக்கம்: பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள அதிரடி தீர்மானம்

.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதன்படி, தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர் பதவிகளில் இருந்து இவ்வாறு பலர் நீக்கப்பட உள்ளனர்.

குறித்த எம்.பி.க்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்க அக்கட்சி நேற்றுமுன்தினம் (29) தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (30) அறிவித்தது.

இதன் காரணமாக கட்சியின் பொறுப்புகளுக்கு புதியவர்களை விரைவாக நியமிக்க அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து பிரசன்ன ரணதுங்கவும், காலி மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து ரமேஷ் பத்திரன, மாத்தறை மாவட்ட அமைப்பாளர் கஞ்சன விஜேசேகர ஆகியோரை ஏற்கனவே அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.