Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

“இலங்கையின் பலவீனமான அரசாங்கத்தையே நாடுகள் விரும்புகின்றன“

.

இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டார்.

மேலும் வாக்களிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன யூடியூப் வலைத்தளத்த்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடளித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் பலவீனமான அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிராந்திய நாடுகள் உட்பட சில பலம் வாய்ந்த நாடுகள் விரும்புவதாகவும் அதன் மூலம் அவர்கள் பயனடைய முயற்சிப்பதாகவும் அவர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.