44 வயதுடைய அமிர்த பிரதீபன் வித்யா உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!
மனைவியின் உடல் விறைத்த நிலையில், அவரது கணவர் உடனடியாக அவரை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
உயிரிழந்த நிலையில் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு.
44 வயதுடைய அமிர்த பிரதீபன் வித்யா என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுண்ணாகம் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.
வேளவளவு, சுன்னாகம் மேற்கு பகுதியிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக குறித்த பெண் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் தனியார் மருந்தகத்தில் சில மருந்துகளை வாங்கி உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (11)காலை உணவினை எடுத்து விட்டு தூக்கத்துக்கு சென்றுள்ளார்.
மனைவியின் உடல் விறைத்த நிலையில், அவரது கணவர் உடனடியாக அவரை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
எனினும் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
மல்லாகம் நீதிமன்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். உடல் கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.


