Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அமரர் ஆர். சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம்; இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

.

அமரர் ஆர். சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம்: இன்னும் ஒப்படைக்கப்படவில்லை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர். சம்பந்தன் உயிரிழக்க முன் பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவரின் பங்களாவை எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அவரின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது அமரர் ஆர். சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இழக்கப்பட்ட பின்னரும் கூட அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சராக செயற்பட்ட கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையே அதற்குக் காரணம் ஆகும்.

ஆர். சம்பந்தன் கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி உயிரிழந்தார்.

உயிரிழந்து மூன்று மாதங்கள் கடந்த போதிலும் இன்னும் குறித்த உத்தியோகபூர்வ இல்லம் அவரின் குடும்ப உறவினர்களின் பொறுப்பிலேயே காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அமரர் சம்பந்தனுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கிய அமைச்சரவை பத்திரத்தை மாற்றவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகள் , பணியாளர்களுக்கான சம்பளம் போன்றவை அரசாங்கத்தின் மூலமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.