Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ரணிலுக்கு வாய்ப்பு இல்லை: ராஜபக்சர்கள் பொறுமையை இழந்துவிட்டனர்

.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட மாட்டாது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கையால், ராஜபக்சவினர் பொறுமையின் எல்லையை எட்டியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்டுள்ள சர்வஜன அதிகாரம் என்ற அரசியல் கூட்டணி விரைவில் பொதுஜன பெரமுனவுடன் இணையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்றனர்.

இந்த சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உறவினரும் அவரது நெருங்கிய நண்பராகவும் கருதப்படும் உதயங்க வீரதுங்கவின் இந்தக் கருத்து இவர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, செஹான் சேமசிங்க, கஞ்சன விஜேசேகர உட்பட பொதுஜன பெரமுனவின் பல முக்கிய அமைச்சர்களும் சிரேஷ்ட தலைவர்களும் பல கட்சிகளுடன் இணைந்து விரைவில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் பொது கூட்டணியொன்றை உருவாக்கவும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.