Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முஸ்லிம் கட்சிகள் ரணிலுடன் கைகோர்க்குமா?; கொழும்பில் நடைபெறும் ரகசிய பேச்சுகள்

.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக தெரிவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தமது கூட்டணிக்குள் கொண்டுவரும் ரகசிய பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ.தே.கவின் கூட்டணியிலேயே இக்கட்சிகள் இருந்தன.

என்றாலும், 2020 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியுடன் கைகோர்த்தன. தொடர்ந்து அக்கூட்டணியிலேயே இக்கட்சிகள் இரண்டும் பயணித்து வருகின்றன.

இந்த பின்புலத்தில் ரணில் விக்ரமசிங்க தமது கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கொண்டுவந்தால் முஸ்லிம் மக்களின் குறிப்பிடத்தக்களவான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என கணக்குப் போட்டுள்ளார்.

ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீமுடன் இதுதொடர்பில் ரகசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்கள் இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் அளிக்கவில்லை.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம் தாம் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியிலேயே இருப்பதாக தெரிவித்திருந்தார்.

என்றாலும், ரிசாத் பதியுதீன் இதுவரை ஜனாதிபதித் தேர்தல் கூட்டணி தொடர்பில் கருத்தகள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.