Breaking News
பாகிஸ்தானியர்களுக்கு கரிசனம் காட்டிய மத்திய அரசு; அட்டாரி எல்லை வழியாக செல்ல விதிக்கப்பட்ட தடையில் தளர்வு!
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேறுவதற்காக மத்திய அரசுபுதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கையாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்கள் வெளியேறுவதற்காக மத்திய அரசுபுதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக, மே 1 முதல் அட்டாரி சர்வதேச எல்லையில், எல்லை தாண்டிய அனைத்து நடமாட்டத்தையும் வர்த்தகத்தையும் நிறுத்தி வைக்க இந்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், அட்டாரி சர்வதேச எல்லை வழியாக தங்கள் நாட்டிற்குத் திரும்ப பாகிஸ்தானியர்களுக்கு எந்தவித காலக்கெடுவும் இல்லாமல் இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.