சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 20.
147 நாடுகளை உள்ளடக்கி நடாத்தப்பட்ட ஆய்வின்படி 4.0 புள்ளிகளைப் பெற்று இலங்கை உலகளாவிய ரீதியில் 134 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 20.
மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 20 ஆம் திகதியில் உலக மகிழ்ச்சி தினத்தை சிறப்பிப்பதற்கான காரணம், இளவேனிற் காலத்தின் அதாவது, வசந்த காலத்தின் தொடக்க நாள். அந்த நாளில் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். இதனால்தான் இந்த நாளை, உலகின் மகிழ்ச்சி தினமாகச் சிறப்பிக்க தேர்ந்தெடுத்திருக்கிறது ஐ.நா. நிறுவனம்.
மகிழ்ச்சியாக வாழ்வது, மனித உரிமைகளில் ஒன்று. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம், உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது. அந்த அவையின் அறிவிப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 20ஆம் தேதி, ஒவ்வொரு தலைப்பில், உலக மகிழ்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக "சமூக ஊடகம் மற்றும் மகிழ்ச்சி" விளங்குகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 19/03/2026 வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் மொத்தம் 147 நாடுகளை உள்ளடக்கி நடாத்தப்பட்ட ஆய்வின்படி 4.0 புள்ளிகளைப் பெற்று இலங்கை உலகளாவிய ரீதியில் 134 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம், உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது மிகவும் நல்ல விடயம் தான், ஆனால் சில நாடுகளின் நலனுக்காக பல நாடுகளின் மகிழ்ச்சி பறிபோவதை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை கண்டுகொள்வதில்லை. இதில் ஈழத்தமிழர்களின் மிகழ்ச்சி தெடங்கி லெபனான், காசா, உக்ரைன், வெனிசுலா, கண்முன்னே ஈரான் மக்களின் மகிழ்ச்சியும் அடங்கும்.


