Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேசிய மக்கள் சக்தியின் எம்.பிகள் சம்பளத்தை எவ்வாறு பெறுவர்?; சுனில் ஹந்துன்நெத்தி விளக்கம்

.

புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. குறித்த உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கட்சியின் நிதியத்துக்கே வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் தெரிவித்தாவது,

”தமது கட்சி சலுகைகளுக்காக அரசியல் செய்யும் இயக்கம் அல்ல. ஆளுங்கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படாது.

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் நிதியத்துக்கே தமது சம்பளத்தை வழங்குவர். நிதியத்தின் ஊடாகவே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.” என்றார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அல்லது கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்த எம்.பிகள், தமது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நேரடியாக கட்சியின் நிதியத்துக்கே வழங்கியிருந்தனர். கட்சியின் நிதியத்தின் ஊடாகவே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.