Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வாலிபம் சிதைந்து தசாப்தம் மூன்றாக முறித்த சிறகுடன் வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை சாந்தன்!

கோமியம் குடிக்கும் இந்தியம் கோவணம் தொலைத்திட்ட நாள்!

“வாலிபம் சிதைந்து முறித்தெடுத்த சிறகுடன்
வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை!”
ஈழத்தமிழரின் விஷ முள்ளு இந்தியம்! ஈனத்தின் உச்ச வஞ்சனையின் நச்சுக் கூடு!
ஈழ இனத்தினை வாழ விடாது இந்தியம், இறங்கி வந்து இராமன் சொன்னால் அன்றி!
வக்கிர வேட்டையில் இரையான உயிர் பல! வரலாற்றில் தொடரும் சாத்தானின் வேதம்!
வலிந்து சாந்தனின் உயிரையும் பறித்தது! வஞ்சனையால் இதழ் ஒன்று உதிர்ந்தது
வயோதிப மலர்காம்பின் தொடுகை இன்றி! தசாப்தம் மூன்றாக முறித்த சிறகுடன்
வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை! வலிந்து பறிக்கப்பட்ட இவன் உயிர்
வாழ விடாது ஒரு நாளும் இந்தியத்தை! வாலிப வாழ்வை சிதைத்த சிறைக்கூடம்!
வலி தாங்கியே நீதி மன்றில் இடி தாங்கி வடுக் கொண்ட நெஞ்சுடன் வாடியே தினமும்
வாழ்வை எண்ணி ஏங்கிய இவனின்- சிறை வாசல் சென்றாரா ஈழத்து அரசியல் தரகர்கள்?
கட்குழிக்குள் எப்போதும் பெரும் ஏக்கம் கடல் தாண்டி தன் மகனை கட்டியணைத்திட!
கனத்த இதயத்துடன் கனவு பல ஏந்தி காத்திருந்தாள் ஒரு நாள் வருவானென்று!
கருவாய் சுமந்த தன் ஆசைப் பிள்ளையை கட்டிலிலே பிணமாய் பார்த்து கலங்கினாள்!
வாய்திறந்து அம்மா எனை கூப்பிடு என்று வார்த்தை அடைக்க அவள் இதயம் அழுதது!
நீதி தேவதைக்கு கண்கள் தைத்து தருமம் செத்திட்ட நாள்!
கோமியம் குடிக்கும் இந்தியம் கோவணம் தொலைத்திட்ட நாள்!
கற்காலத்தினை மனிதம் தொட்டு காந்தீயம் மீண்டும் மரணித்த நாள்!
- பரிதிவளவன்