Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில். வன்முறைக்கு தயாரான கும்பல் ஆயுதங்களுடன் கைது!

.

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றுக்கு தயாரான வன்முறை கும்பல் ஒன்றினை ஆயுதங்களுடன் கோப்பாய் காவற்துறையினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (28.06.24) கைது செய்துள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று நடமாடுவதாக கோப்பாய் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கைக்கோடாரிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், இவர்களுடன் தொடர்பில் இருக்கும் ஏனையவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்