Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மின்சாரம் மற்றும் டீசல் மாபியாவில் அரசாங்கம் சிக்கியுள்ளது.

பொய் வென்று உண்மை தோற்றுவிட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

2/3 பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் வைத்துக் கொண்டு பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத்தையும்  கேட்கின்றனர்.

நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது என்று வீதியில் இறங்கி மக்களிடம் கேட்டால் பதில் வழங்குவார்கள்.

மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பொய் வென்று உண்மை தோற்றுவிட்டது. இன்று மக்கள் வாழ முடியாத நிலையில் வருமானம் இல்லாமல் மூன்று வேளை கூட சரியாக சாப்பிட முடியாத நிலையை அடைந்துள்ளனர். இதனால் பாடசாலை மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பால் மா விலைகளும், பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வேளையில் அரசாங்கம் அழுது புலம்புக்கிக் கொண்டிருக்கிறது. தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்கு தான் காரணமாம். நாய்களுக்கு சோறு போடுவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணமாம். இதனால் ஒன்றுமே செய்ய முடியாது என புலம்புகின்றனர்.

தெளிவான மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு பணியாற்ற முடியாது, கிராமத்து அதிகாரத்தையும் கோருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அரிசி, தேங்காய் விலைகளின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்து, மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதமாக கேலி செய்து வருகின்றனர். 

மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி நாடு பாழாகியிருக்கும் வேளையில், போதா குறைக்கு கிராமத்தின் அதிகாரத்தையும் கேட்கின்றனர். நாட்டுக்கு சேவையாற்ற போதுமான அதிகாரத்தை மக்கள் தெளிவாகவே இந்த அரசாங்கத்திற்கு பெற்றுத் தந்துள்ளனர். அடுத்தவர் மீது பழி போடுவதை விடுத்து செய்து காட்டுங்கள்.

மின்சாரம் மற்றும் டீசல் மாபியாவில் அரசாங்கம் சிக்கியுள்ளது.

தற்போது மின்சார மாபியா நாட்டையே ஆட்கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டிற்கும், நுகர்வோருக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும். என்றாலும், நமது நாட்டிலிருந்து சூரிய சக்தியை ஒழிக்கத் தேவையான அனைத்து திட்டங்களையும் வகுத்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டண விகிதம் குறைக்கப்பட்டு, டீசல் மாபியாவுக்கும், எரிபொருள் மாபியாவுக்கும் இடமளித்துள்ளனர். இந்த மாபியாவுக்கு இடமளிக்க முடியாது. சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் இன்னும் அதிகமாக இயக்கப்பட வேண்டும். 

தேர்தல் காலத்தில் அரசாங்கம் என்னதான் பேசினாலும், இன்று டீசல் எரிசக்தி மாபியாக்களினது அடிமைகளாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.