Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க புதிய அமைப்பு; மீண்டும் மகிந்த சிந்தனை

.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறைந்தது நான்கு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இளைஞர்கள் தலைமையில் இயங்குவதாகக் காட்ட முயற்சித்து வரும் நிலையில் அதற்கு “மகிந்த சிந்தனையைப் பாதுகாப்பதற்கான தேசிய ஒன்றியம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் அழைப்பாளராக நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான தம்மிக்க சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “இளைஞர்களுக்கு ஓர் நாளை” என்ற அமைப்பின் செயற்பாட்டாளராக செயற்பட்டமை தெரியவந்துள்ளது.

நாமல் ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டு வருவதாகவும், தனது தனிப்பட்ட அரசியல் இலக்குகளை முன்னெடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளார் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.