Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிரபாகரனை எதிர்ப்பவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது

.

விடுதலைப் புலிகலின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சமூக செயற்பாட்டாளரே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஸக்கள் அரச நிதியை மோசடி செய்து அதனை உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக பொய்யுரைத்து மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டி விட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. சமூக ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் அரசியல் கட்டமைப்பை வெறுப்புக்குள்ளாக்கி, பொய்யை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம்.தவறான முறையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தின் கையாட்களாக செயற்படுவதையிட்டு பொலிஸார் வெட்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த சமூக செயற்பாட்டாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபாகரனை கடவுள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கை வரைபடத்தில் தமிழீழத்தை உருவாக்கி மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.