Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் 80 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம்

.

தொற்றாத நோய்கள் இலங்கையில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் இலங்கையில் 80 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலைமையை எதிர்கொள்ள மாத்தளை மாவட்டத்தில் பலதரப்பு தலையீட்டை உருவாக்குவதற்கு மத்திய மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு மாத்தளை மாவட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாத்தளை மாவட்ட செயலாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிராந்திய கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட சமூக சேவைகள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர், அனர்த்த உதவி பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பலதரப்பட்ட நிறுவனங்களும் இந்தக் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் குழு ஒன்று கூடி தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு தேவையான வசதிகள் மாத்தளை மாவட்டச் செயலாளர் ஊடாக மத்திய மாகாண சபையின் தலையீட்டின் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.