ஈஸ்டர் படுகொலைகள் நடந்து ஆறாண்டுகளாகிறது! - விசாரணைகளை நிறுத்துமாறு அரச புலனாய்வு சேவை (ளுஐளு) நிலந்த ஜெயவர்தன பணித்திருந்தார்?
,

இராணுவ புலனாய்வு பிரிவு (MI), அரச புலனாய்வு சேவை (SIS) ஆகிய புலனாய்வு வலையமைப்புகளால் இயக்கப்பட்ட மத அடிப்படைவாத குழுவொன்று (NTJ) இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியிருந்தது.இந்த அடிப்படை வாத குழுவின் (NTJ) 'ஈஸ்டர்:19' சதியில் புலனாய்வு வலையமைப்புகளின் பங்கை அதை சூழ நடந்த சம்பவங்கள் உறுதி செய்வதாக பல்வேறு தரப்புகள் அறிக்கையிடுகின்றன. விசேடமாக வவுணதீவில் நடந்த 2 பொலிஸார் கொலையுடன், அடிப்படை வாத குழுவிற்கு இருந்த தொடர்பை மறைக்க,புலனாய்வு வலையமைப்புகள் (MI,SIS) முயற்சித்தமையை ஆதாரம் காட்டுகின்றன. குறிப்பாக கேணல் கெலும் மத்துமகே என அடையாளப்படுத்தப்படும் அதிகாரி ஊடக விசாரணைகளை தவறாக வழிநடத்தும் வகையில் 4 அறிக்கைகளை புலனாய்வு வலையமைப்புகள் முன்வைத்திருந்தனர். இது மாத்திரமின்றி அடிப்படைவாத குழு (NTJ) மீதான விசாரணைகளை முன்னெடுத்த நாலக சில்வா என்கின்ற அதிகாரியிடம் விசாரணைகளை நிறுத்துமாறு அரச புலனாய்வு சேவையை (SIS) நிலந்த ஜெயவர்தன பணித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நாலக சில்வா அவர்கள் திரு மைத்திரிபால சிறிசேன அவர்களை கொல்ல சதி செய்த கு ற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டார்.
நாலக சில்வாவின் சிறைத்தண்டனைக்கு வழிவகுத்த முறைப்பாடுகளுக்கு பின்னணியில் முன்னாள் புலனாய்வு அதிகாரியும், Avant Garde Maritime Services நிறுவன ஊழியரான நாமல் குமார இருந்தாக சொல்லப்படுகின்றது . இந்த நிறுவனம் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான நிஸ்ஸங்க சேனாதிபதி என்பவருக்கு சொந்தமாக இருந்ததுஇ அதே போல நிஸ்ஸங்க சேனாதிபதியின் நிறுவனத்திற்கு சொந்தமான ஈஸ்டர் சதியுடன் தொடர்புடைய லொறியொன்றை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுவித்தது தொடர்பாகவும் தகவல்கள் உண்டு. இவ்வாறான சம்பவங்களின் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு பின்னர் பிரதான குண்டுதாரி M.C.M சஹரானோடு நேரிடியாக தொடர்பிலிருந்த புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரின் Internet Protocol (IP) யும் கண்டறியப்பட்டிருந்தது. இவ் புலனாய்வு அதிகாரி பிள்ளையான் சகிதம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரின் சகா கலீல் எனப்படும் புலனாய்வு அதிகாரியின் மகன் என்பதும் அம்பலமாகியிருந்தது. ஆனால் இவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வர இராணுவ புலனாய்வு பிரிவின் (MI) அப்போதைய பணிப்பாளர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு அனுமதி மறுத்ததும் பகிரங்கமாகியிருக்கின்றதுஇ அதே போல அடிப்படை வாத குழுவில் அங்கம் வகித்த மாத்தளை சேர்ந்த பொடி சஹ்ரான் என்கிற நபருடன் “Sonic Sonic” அடையாளமிடப்பட்ட பண்டார என்கின்ற புலனாய்வு அதிகாரி தொடர்பிலிருந்தும் கண்டறியப்பட்டிருந்தது.
இந்த தொடர்புகள் ஊடாக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்க வைக்க முயற்சிகள் நடந்ததும் தெரிய வந்திருந்தது, ஆனால் பண்டாரவிடம் விசாரணைகளை மேற்கொள்ள அரச புலனாய்வு சேவை (SIS) யை சேர்ந்த அதிகாரி சம்பத் லியனகே தடை விதித்தும் பகிரங்கமாகியுள்ளது, விசேடமாக அப்துல் ஜமீல் முகமது என்கிற குண்டுதாரி தாஜ் சமுத்திர ஹோட்டலில் வெடிக்கத் தயாராகவிருந்த நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரியாக கேணல் அன்சார் என்பவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். அப்துல் ஜமீல் முகமது தெஹிவளையில் தன்னை வெடிக்க வைக்க 45 நிமிடம் வரை இராணுவ புலனாய்வு வலையமைப்போடு தொடர்பிலிருந்தார் என அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதி செய்திருக்கின்றார்.
இது தவிர மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிள்ளையானின் சகா ஆசாத் மௌலானாவிடம் தாஜ் சமுத்திர ஹோட்டல் சென்று அப்துல் ஜமீல் முகமது அழைத்து வர ஒத்துழைக்க அழைத்த தகவலும் பொது வெளியில் உண்டு, இவ்வாறு பொது வெளியில் பகிரப்பட்ட தரவுகளும் கத்தோலிக்க திருச்சபையின் Fr. Cyril Gamini பெர்னாண்டோ முன்வைக்கும் ஆதாரங்களும் அசாத் மௌலானாவின் வாக்குமூலமும் பொருந்தி போகின்றன, இந்த தரவுகள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பளாராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களை பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காண்கின்றன.
குறிப்பாக சுரேஷ் சாலே மற்றும் மத அடிப்படைவாத குழுவிற்குமிடையே (NTJ) தரகராக பிள்ளையான் பயன்படுத்த பட்டிருக்கின்றார்இ விசேடமாக பிள்ளையான் ஊடாகவே மத அடிப்படைவாத குழுவிற்கு (NTJது) பண பரிவர்த்தனை நடைபெற்று இருக்கின்றது. அதேபோல புத்தளம் வனாத்துமுல்லையில் மத அடிப்படைவாத குழுவிற்கும் (NTJ) சுரேஷ் சாலே அவர்களுக்கான சந்திப்பும் பிள்ளையான் ஊடாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது, விசேடமாக சிறையிலிருந்த பிள்ளையான் தொலை பேசி மற்றும் சில்வா என அடையாளம் காணப்படும் நபருடாக சுரேஷ் சாலே அவர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.
இதற்கு மேலதிகமாக பிரதான குண்டுதாரியான M.C.M சஹரான் புலனாய்வு அதிகாரி நிசாம் முத்தலிப்பினால் புலனாய்வு சேவைக்கு உள்வாங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு விலகியிருந்தார். இதன் பின் சுரேஷ் சாலே ஊடாகவே அவர் மீண்டும் புலனாய்வு சேவைக்கு உள்வாங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது, இது மாத்திரமின்றி மிக வளமிக்க குடும்ப பின்னணிகளை கொண்ட குண்டுதாரிகள் பல்வேறு தரப்புகளிடம் செல்வாக்கை கொண்டிருந்தார்கள். விசேடமாக குண்டுதாரிகளான இப்ராஹிம் சகோதரர்களின் தந்தை முகமது யூசுப் இப்ராஹிம் 2015 ஆண்டு தேர்தலுக்கான ஜேவிபி தேசிய பட்டியல் உறுப்பினராக பட்டியலிடப்படும் அளவிற்கு பலம் பொருந்தியவர்களாக இருந்திருகின்றார்கள்.
இவ்வாறு புலனாய்வு வலையமைப்பின் வழிநடத்தலில் அடிப்படை வாத தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் பகிரங்கப்பட்ட பின்னரும் குற்றவியல் கட்டமைப்பினால் சூத்திரதாரிகளை அடையாளம் காண கூட முடியவில்லை. திரு அனுரா குமார திசாநாயாக்க சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவதாக வழங்கிய வாக்குறுதியும் பொய்த்து போயிருக்கின்றது. இந்த நிலையில் திரு அனுரா குமார திசாநாயாக்க 'ஈஸ்டர்:19' தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை நேற்று CID யிடம் ஒப்படைத்து விட்டதாக சொல்லுகின்றார். திரு அனுரா குமார திசாநாயாக்க அதிகாரத்திற்கு வந்து 7 மாதங்களாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார் என கேட்டால் பதிலிருக்காது. ஒருபுறம் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை திருப்தி படுத்த முயற்சிக்கும் சம நேரத்தில் இராணுவ கட்டமைப்புகளை புனிதபடுத்தவும் ஜேவிபி முயற்சிக்கின்றது. இதற்கு மேலாக தங்கள் அரசியல் நலன்களை அடைத்து கொள்ளுவதற்காக வெற்று அறிவிப்புகளை வெளியிடுகிறது.