பலதும் பத்தும். 09,11,2025 -மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு - யாழில் கைதான சந்தேகநபர்கள்
மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு (18.10.2025) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு - யாழில் கைதான சந்தேகநபர்கள்
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையின்போது கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் கைத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த நபரையும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே சுமார் 90 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் பலர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய கடல்சார் ஆணைய தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 10 பேர் உயிர் பிழைத்ததாகக் கூறியது. அதே நேரத்தில் இதே எண்ணிக்கையிலான மக்களை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகளின் நிலை தெரியவில்லை என எதிர்பார்க்கப்படுகின்றது.
90-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (9) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் திருவுடல் இன்று (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய முக்கிய செய்திகள்:
1. Typhoon Fung Wong என்று பெயரிட்ட சூப்பர் புயல் Philippines நாட்டின் மிகப் பெரிய தீவான்வகுதியை முள்ளமாக தாக்கும் கருதப்படுவதால் சுமார் ஒரு மில்லியன் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Al Jazeera
2. Sudan நாட்டின் பெரும்பாலான பகுதியான Darfur பகுதியில் உள்ள El Fasher நகரம் பரமிலிடரி படைகள் கைப்பற்றியபிறகு ஆயிரக்கணக்கானோர் குடிசை முகாம்களுக்குப்படியாக ஓடியுள்ளனர். CBS News
3. Ukraine கூறுகிறான்: Russia பல ஏடு சங்கிலிகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது மற்றும் இதில் முக்கியமான நியுமின் உபசரிப்புகள் கேணி பொறியகம் போன்றவை இலக்காகியுள்ளன. Financial Times
4. United Nations (UN) வாய்மொழியாக கூறியுள்ளது: சட்டப்பூர்வமான தடைகள் பல இருந்தபினும், பல நாடுகள் ஆபத்தான நிலைகளிற்கு உள்ளாகி இருக்கின்றதாக. குறிப்பாக, போர், வர்த்தக தடைகள், இயற்கை வள காலன்கள் போன்றவை அழிவடைந்து வருகின்றன. Global Issues+1
5. COP30 (பரிஸில் நடைபெறும் உலகளாவிய காலநிலை மாநாடு) வேலையாக விரைவில் நடைபெற உள்ளது — உலக தலைவர்கள், செயலாளர்கள், அனலிஸ்ட்கள் மற்றும் செயல்திறன் மக்கள் கலந்து கொள்ளுவர்.


