Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்.

.

முள்ளிவாய்க்காலில்  இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ்  மக்களை நினைவுகூரும் வகையில் வெள்ளவத்தையில் இன்று (மே 18) காலை  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது ஒன்றுகூடலின் போது    பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக  தொிவிக்கப்படுகின்றது.
அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில்   இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளை மலர்களுடன் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர்.
இதனை மற்றொரு குழு   சீர்குலைக்க முயன்றதனால் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில்    நின்ற  காவல்துறையினர் , போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைக்க  முற்பட்டமை தொடா்பில்   காணொளி  பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவு கூரலானது திடீரென ஒரு சாராரால் ஏற்படுத்தப்பட்ட போது மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டது. காரணம் இந்த தரப்பினர் எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நடந்து கொண்டிருந்த போது அங்கு பங்கு பற்றாத, அதனோடு ஈடுபடாதவர்கள் இதனை அரசியல் லாபத்திற்காகவே செய்வதாக மக்கள் கருதுகின்றனர்.