Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் அதிக ஒலி எழுப்பினால் கடும் நடவடிக்கை!

ஒலிபெருக்கி அனுமதிப் பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை மீறித் அதிக ஒலி எழுப்புபவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகள் (Loudspeakers) பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தப் பிரதேச செயலாளர்கள் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட  மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டத்தில்தலைமையுரையாற்றிய போதே அவர் இந்த முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பொதுமக்களுக்கு, குறிப்பாகப் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எழுப்பப்படும் அதிக ஒலியைக் கட்டுப்படுத்த   ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் அதிக ஒலி எழுப்பப்படுவது கண்காணிக்கப்பட்டு, கிராம உத்தியோகத்தர்கள் (Gramasewaka) ஊடாக அதனை உடனடியாகக் கட்டுப்படுத்தப் பிரதேச செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

ஒலிபெருக்கி அனுமதிப் பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை மீறித் தொடர்ந்து அதிக ஒலி எழுப்புபவர்களுக்கு எதிராக, சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் (Police Station) முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தொிவித்துள்ளாா்.

சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் அதிகார சபைகள் (மாநகர சபை, பிரதேச சபைகள்) கழிவு முகாமைத்துவத்தைத் தாண்டி பின்வரும் விடயங்களிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குப்பைகளைத் திறந்தவெளிகளில் எரிப்பதனால் ஏற்படும் வளி மாசடைவைக் (Air Pollution) கட்டுப்படுத்துதல்,  பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளைக் குடாநாட்டிற்குள் முற்றாகக் கட்டுப்படுத்தல்.விசேட உற்ஸவங்களின் போது பயன்படுத்தப்படும் வாணவேடிக்கைகளால் (Fireworks) சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை வழங்குதல் போன்ற  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார். .

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு கலாசார, சமூக நிகழ்வுகளில் நள்ளிரவு தாண்டியும் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது பொதுமக்களின் நிம்மதியான வாழ்வைக் கெடுப்பதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையைக் கட்டுப்படுத்த மாவட்ட ஜனாதிபதி அதிபர் ம. பிரதீபன் எடுத்துள்ள இந்த உத்தியோகபூர்வ முடிவு வரவேற்கத்தக்கதாகும். சட்டபூர்வ அனுமதிப் பத்திரங்களின் விதிகளுக்கு அமைய மாத்திரமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதைக் காவல் துறையினரும், கிராம உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதிப்படுத்தும்போது மட்டுமே குடாநாட்டில் நிலவும் இந்த ஒலிமாசுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.