Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கம் ஒன்றிணைந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம்!

போராட்டத்தினால் அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பளர் சிந்தக பண்டார .

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணிக்கு பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமானது. 
இந்நிலையில் இப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
மத்திய தபால் பரிமாற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 
இதனால், அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், இது தொடர்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன், சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டபோதும் இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது எனக் கூறியுள்ளார். 
“3000 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை பணி நிறுத்தத்தில் இல்லை. 
இருப்பினும் தபால் பொருட்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். 
மீண்டும் பணிக்குத் திரும்ப தயாராக சிலர் இருப்பினும் அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. 
அதனால் அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். 
இதுபோன்ற செயல்கள் நடப்பின் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.