Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரின் கலாச்சார நகரான யாழ்ப்பாணம் வந்த சிங்கள இனவாத அரசின் பிரதமர்.

.

தமிழரின் கலாச்சார நகரான யாழ்ப்பாணம் வந்த சிங்கள இனவாத அரசின் பிரதமர்
ஹ ரி ணி அவர்கள் அணிந்துவந்த உடை தமிழர்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மூவின மக்களின் பிரதமராக தன்னை அடையாளப்படுத்தி பிரச்சாரம் செய்யும் ஹரிணி அவர்கள் தமிழினத்தின் கலாச்சாரத்தை சிறிதளவும் மதிக்காது யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்குச் சென்று
மாணவர்களுக்கு போதித்தது ஆடுகளுக்கு ஓநாய் வேதம் ஓதுவதுபோலவே இருந்துள்ளது.
1974 ஒக்ரோபரில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு வந்த அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட இவ்வாறு உடையணிந்து வருகை தரவில்லை.
பாடசாலை நிகழ்வுகளுக்குச் செல்வதென்று தெரிந்தும் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக சந்தைக்கு போவதுபோன்று உடையணிந்துவந்த ஹரிணி அவர்களின் செயற்பாடு அருவருக்கத்தக்கதாக அமைந்துள்ளதென யாழ் கலாச்சார பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹரிணி அவர்களை வரவேற்க பண்பாட்டு வாத்தியங்களுடன் நின்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள்,ஆசிரியர்கள் பண்பாட்டு உடையுடுத்தி ஹரிணி அவர்களை வரவேற்று பொட்டுவைத்து பொன்னாடை போர்த்தி நாகரிகமாக நடந்துகொண்டபோதும் ஹரிணி அவர்கள் தமிழரின் கலாச்சாரத்தை மதிக்கத் தவறியதற்காக மனம்வருந்தி தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.