Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐக்கிய மக்கள் கூட்டணியில் தொடரும் தேசியப் பட்டியல் சர்ச்சை?

.

ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், குறித்த கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியாக சுதந்திர மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் செயற்படுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த ஐந்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளில் ஒன்றிற்கு அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் இதுவரையில் யாருக்கும் வழங்கப்படவில்லை.

கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு வாக்குறுதியளித்தபடி ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், அக்கட்சியின் தோற்கடிக்கப்பட்ட உறுப்பினர்களை தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த தாமதத்திற்கான காரணமாகும்.

ஐக்கிய மக்கள் கூட்டணியில் தேசியப் பட்டியலில் மூன்றிலிருந்து ஐந்தாம் இடம் வரையில் சுதந்திர மக்கள் காங்கிரஸின் டலஸ் அழகப்பெரும, தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாகரன் விஜயேந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிஷாம் காரியப்பர் ஆகிய வேட்பாளர்களாவர்.

அந்த பட்டியலில் முதல் இரண்டு வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் ஆவர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்த படி ஏனைய கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லை. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே நிரப்பியமை குறிப்பிடத்தக்கது.