Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் பொன்சேகா: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

.

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதை அறிவிப்பார் என அவரது ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகாவின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஜகனா கிருஷ்ணகுமார் மற்றும் வெங்கடேஷ் தர்மராஜா ஆகியோர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 7 மற்றும் 9 ஆம் திகதிக்கு இடையில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சரத் பொன்சேகா சுயேட்சை மக்கள் வேட்பாளராக போட்டியிடுவார் என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆதரவை வழங்குவார்கள் என குறித்த இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை சரத் பொன்சேகா முன்னதாகவே அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

எனினும்,முறையான அறிவிப்புக்கு முன்னதாக சில விஷயங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகதவும், அதன் காரணமாகவே இந்த தாமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய சரத் பொன்சேகா, ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதால் அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.