Breaking News
அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம் - ஜனாதிபதி
,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் அவை முழு வீச்சில் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.