Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சீத்தைப் புலி எனப் பெயர் சூட்டியவர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை.

.

புலியினத்தைச் சேர்ந்த சீட்டா (Cheetah) என்ற விலங்கு, தமிழில் சிவிங்கிப்புலி என அழைக்கப்படுகிறது.
சீத்தைப் புலி என்றும் இதை அழைக்கலாம். இந்த விலங்குக்கு சீத்தைப் புலி எனப் பெயர் சூட்டியவர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை.
1954ஆம் ஆண்டு அவர் தொகுத்து வெளியிட்ட ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற பொது அறிவுப்புத்தகத்தில் இந்தப் பெயர் இடம்பெற்றுள்ளது.
சீத்தைப்புலி, உடல் முழுக்க புள்ளிகள் கொண்ட ஒரு விலங்கு. அதுபோல வடமொழியில் சீத்தல் (Chital) என்ற சொல் புள்ளிமானைக் குறிக்கும். தமிழில் இருந்தே இந்தப் பெயர் வந்திருக்கலாம்.
சீய்த்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு தெறித்தல் என்ற பொருள் உண்டு. ‘பாற்புகை முகிலைச் சீய்த்து பளிச்சென திங்கள் சேவல்’ என்று அழகின் சிரிப்பு நூலில் பாவேந்தர் பாரதிதாசன் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். சீய்ப்பதானாலும் (தெறிப்பதனாலும்) புள்ளிகள் வருவதுண்டு.
தமிழில், புள்ளிகள் பொறித்த ஓர் உயிருக்கோ, பொருளுக்கோ, சீத்தை என்பது பொதுவான பெயர்.
கடல்மேல் பறக்கும் காவாப்புள் இனத்தைச்சேர்ந்த பறவைகளில் ஒன்று சீத்தாப்புள். அது புள்ளிகள் கொண்ட பறவை என்பதால் அந்தப் பெயரைப் பெற்றிருக்க வேண்டும்.
சண்டைச் சேவல்களில் கூட வண்ணப் புள்ளிகள் பொறித்த சேவல் வகைக்கு சீத்தா என்று ஒரு பெயர் உண்டு.
சீத்தைத் துணி என்பது அச்சிடப்பட்ட பருத்தித் துணியைக் குறிக்கும். இது இலங்கை வழக்குச் சொல்.
அதுபோல சீத்தாப்பழத்துக்கும் கூட அதன் மேலே உள்ள புள்ளிகள் போன்ற உருவத்தோற்றம் காரணமாக அந்தப் பெயர் வந்திருக்கலாம்.
 
மோகன ரூபன் முகநூல் பதிவு 20.12.2024.