Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மனிதர்கள் வேறு எதையோ உங்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!

.

80 - களின் தொடக்கம். மதுரையில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியில் அழகு போட்டி நடப்பதாக கூறியிருந்தார்கள்.
 செய்தியை சேகரிப்பதற்காக கல்லூரிக்கு சென்றேன். அப்போது பல மாணவிகள் ஆர்வமுடன் அந்த போட்டியில் பங்கேற்றனர். அவர்கள் அணிந்த உடை எல்லாம் சினிமா நடிகைகளை பின்பற்றி அமைந்திருந்தது .
சில மாணவிகள் அணிந்திருந்த உடை கவர்ச்சியாகவும் இருந்தது.
 இதில் சிறந்த ஆடை அணிந்த மாணவியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டார்.
 காரணம் அவர் மட்டும்தான் முழுமையாக சேலை அணிந்து கலந்து கொண்டார் .
அந்த பெண் வேறு யாரும் இல்லை .
மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் மகள்.
 அந்த கடை விளம்பரம் செய்யும்போது ஜவுளிக்கடை என்பதில் கடை என்பதை அடித்துவிட்டு கடல் என்று போடுவார்கள் .
இப்போதைய சரவணா ஸ்டோர் போல அப்போது மதுரையில் பிரபலமான ஜவுளி கடை .
அந்த பெண்ணை தான் நடிகர் ரகுமான் திருமண செய்து கொண்டார் .
அந்த பெண்ணின் சகோதரியை தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் திருமணம் செய்து கொண்டார் .
இவை காதல் திருமணங்கள் அல்ல.
 பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணங்கள்.
 இந்த பின்னணியிலிருந்து வந்த பெண்கள் எப்படி இந்த  முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
 ஏனென்றால் ஏ ஆர் ரகுமான் மீது பெரிய அளவில் எந்த விமர்சனம் வந்தது இல்லை . சுமூகமான திருமண வாழ்க்கையின் பலனாகத்தான் தான் இரண்டு மகள்கள்இ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளனர்
அவர் இந்த மண்ணை நேசிப்பவர். இந்த மொழியை நேசிப்பவர் .. தனது மத நம்பிக்கையை பிறரிடம் வற்புறுத்தாதவர்.
உழைப்பதில் சலிக்காதவர்.
பணத்துக்கும் புகழுக்கும் பஞ்சமில்லை.
இருந்தும் திருமண வாழ்க்கை 30 வருடத்திற்குள் முறிந்து விட்டதை பார்க்கும்போது எல்லாவற்றையும் மீறி மனிதர்கள் வேறு எதையோ உங்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது..