காலத்திற்கு காலம் தமிழினத்திற்கும் துரோகம் இழைத்தவர்கள்!!! தமிழின எதிரிகள் அதிகம் நம்பியது கருணாவையே.
சிலர் திறைமைசாலிகள் ஆகவும், ஓரளவு தனித்துவத்தோடு இயங்கக்கூடியவர்கள் ஆகவும் இருந்துள்ளார்கள். சிலர் வெறும் சாவி கொடுத்த பொம்மைகளாக மட்டும் இருந்துள்ளார்கள்.

தமிழினத்திற்கும் துரோகம் இழைத்தவர்கள்!!!
தமிழினம் காலத்திற்கு காலம் பல துரோகிகளை சந்தித்து வந்திருக்கிறது. அதில் சிலர் திறைமைசாலிகள் ஆகவும், ஓரளவு தனித்துவத்தோடு இயங்கக்கூடியவர்கள் ஆகவும் இருந்துள்ளார்கள். சிலர் வெறும் சாவி கொடுத்த பொம்மைகளாக மட்டும் இருந்துள்ளார்கள். இதில் கருணா இரண்டாவது ரகம். தமிழர் விடுதலைக் கூட்டணியும், இராணுவரீதியாக மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்களும் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். யதார்த்தத்தை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டது. மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த வகையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு சிங்கள அரசு டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா போன்றவர்களை பயன்படுத்திவருகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அரசியல்ரீதியான செயற்பாடுகளுக்கு ஆனந்தசங்கரியை தலைமை ஏற்க செய்வதற்கு இந்திய அரசும், சிங்கள அரசும் முயன்றன. ஆனால் ஆனந்தசங்கரியோ அவரது உற்ற துணையாக இருந்த கதிர்காமர் கொல்லப்பட்ட பின்பு, செய்வது அறியாது தடுமாறி இருந்துள்ளார்கள். 1988ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் கைக்கூலியாக வரதராஜப்பெருமாளும் பத்மநாபாவும் செயற்பட்டார்கள். துரோகிகளின் அன்றைய கதாநாயகாகள் அவர்கள்தான். இவர்களில் தமிழின எதிரிகள் அதிகம் நம்பியது கருணாவையே. கருணா துரோகம் இழைத்த பொழுது மிகப் பெரிய ஒரு சக்தியாக சிங்கள அரசின் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சரியான சவாலாக கருணா இருப்பார் என்று சிறிலங்கா அரசு அக மகிழ்ந்திருந்தது.
ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து பின் தனித்து இயங்கிய ராசிக் கிழக்கில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஓரளவு சவாலாக விளங்கியவர் என்பது உண்மை. ராசிக் குழு சட்டப்படி சிறிலங்கா அரசின் துணைப்படையாக இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் ராசிக் குழுவுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. தமிழ் மக்களை துன்புறுத்துவதிலும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலும் ராசிக் குழு சிறிலங்கா இராணுவத்திற்கு பெரும் துணையாக செயற்பட்டு வந்தது. யுத்த காலத்தில் கூட ராசிக்குழுவால் சில புலனாய்வு வேலைகளில் ஈடுபட முடிந்தது. அது மட்டுமன்றி ராசிக் கிழக்கிலேயே வசித்து வந்தார். பலத்த பாதுகாப்போடு கிழக்கில் நடமாடிய ராசிக்கை நெருங்குவது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. கடைசியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் மூலம் ராசிக் கொல்லப்பட்டார். ஒரு தமிழினத் துரோகியை அழிப்பதற்கு விடுதலைப்புலிகளால் தற்கொலைத் தாக்குதலை நடத்த வேண்டி வந்தது ராசிக் விடயத்தில் மட்டுமே.
இதில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான கேணல் கருணா ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களை விட திறமையானவர்தான். காரணம் அந்தக் கருணாவிற்கு தேசியத் தலைவரின் வழிகாட்டல் இருந்தது. ஆனால் உண்மையில் கருணா குழு என்பது தனித்து இயங்குவதற்கு வல்லமையை எவ்விதத்திலும் கொண்டிருக்கவில்லை. ஆட் பலமோ, ஆயுத பலமோ, மக்கள் ஆதரவு சிறிதளவு கூட இல்லாது ஒரு ரௌடிக் கும்பல்தான் கருணா குழு. கடசியில் மட்டகளப்பு போராளிகளிடமும் தளபதிகளிடமும் அடி வாங்கி நாடு நாடுகளாக ஓடித் திரிகின்றார். ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா அரசு 'தீச்சுவாலை' என்னும் பெயரில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய இராணுவத் தளங்களில் இருந்து இந்த படையெடுப்பு நடந்தது. பெரும் எடுப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஓரே நாளில் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு குறுகிய நேரத்தில் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதை உலகம் கண்ட சமர்களாமாக 'தீச்சுவாலை' அமைந்தது. ஏறக்குறைய ஆயிரம் படையினர் இறந்தும் மூவாயிரம் படையினர் காயமடைந்தும் போனார்கள்.
சிறிலங்கா இராணுவம் பெயர் சூட்டி ஆரம்பித்த நடவடிக்கைகளில் தீச்சுவாலை மட்டும்தான் ஒரு சிறு நிலபரப்பைக் கூட கைப்பற்றாது முடிந்து போனது. அது மட்டுமன்றி முதல் முறையாக தங்களின் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக எவ்வித சப்பைக்கட்டும் கட்டாமல் சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்ததும் அதுவே முதற் தடவையாக இருந்தது. பல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது.
அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.
ஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவார்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.