Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

OFPRA அகதி அந்தஸ்தை மீளப் பெறுதல்: இலங்கையர்களுக்கான ஒரு ஆழமான பார்வை - நன்மையா? தீமையா?

ஊரில் இருக்கும் வயதான பெற்றோரைப் பார்க்க வேண்டும், தனது பூர்வீக நிலத்தை ஒருமுறை எட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம்

OFPRA அகதி அந்தஸ்தை மீளப் பெறுதல்: இலங்கையர்களுக்கான ஒரு ஆழமான பார்வை - நன்மையா? தீமையா?
திரு. ஆனா(கற்பனை )  , இலங்கையின் போர்க்காலச் சூழலிலிருந்து தப்பித்து, 2010-ல் பிரான்ஸ் வருகிறார். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, OFPRA (பிரான்சின் அகதிகள் மற்றும் நாடற்றோரைப் பாதுகாக்கும் அலுவலகம்) அவருக்கு அகதி அந்தஸ்தை வழங்குகிறது. அதன் மூலம், 10 வருட வதிவிட அட்டை (Carte de résident) பெற்று, பிரான்சில் தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஆண்டுகள் உருண்டோடுகின்றன. இப்போது 2025-ல், இலங்கையில் நிலைமை மாறிவிட்டது போலத் தோன்றுகிறது. ஊரில் இருக்கும் வயதான பெற்றோரைப் பார்க்க வேண்டும், தனது பூர்வீக நிலத்தை ஒருமுறை எட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவருக்குள் எழுகிறது.
அப்போது, நண்பர் ஒருவர் கூறுகிறார், "நீங்கள் அகதி அந்தஸ்தைத் திரும்ப ஒப்படைத்து விட்டால், இலங்கை பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு சுலபமாக ஊருக்குப் போய்விட்டு வரலாம்" என்று. இதைக் கேட்கும் திரு. ஆனாவுக்குள் ஒரு சிந்தனை ஓடுகிறது. "அப்படிச் செய்தால் என்ன?"
இந்தச் சிந்தனையின் விளைவுகள்தான் சாதகங்களும் பாதகங்களும்.
சாதகங்கள்: தாய்நாடு திரும்பும் ஏக்கம் தரும் ஒரே ஒரு நன்மை
உண்மையில், அகதி அந்தஸ்தை நீங்களாகவே திரும்ப ஒப்படைப்பதால் ஒரே ஒரு "சாதகம்" மட்டுமே உள்ளது.
இலங்கைக்குப் பயணிக்க வழி பிறக்கும்: அகதி அந்தஸ்தை நீங்கள் துறந்துவிட்டால், பிரான்சின் பாதுகாப்பில் நீங்கள் இல்லை என்று அர்த்தம். அதன் பிறகு, நீங்கள் இலங்கைத் தூதரகத்தை அணுகி, மீண்டும் இலங்கை பாஸ்போர்ட்டைப் பெற்று, உங்கள் தாய்நாட்டிற்குப் பயணிக்க முடியும். பிரான்ஸ் அரசு உங்களைத் தடுக்காது, ஏனெனில் நீங்கள் அகதி இல்லை.
ஆனால், இந்த ஒரே ஒரு நன்மைக்காக நீங்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம்.
பாதகங்கள்: நீங்கள் இழக்கப்போகும் மிக மோசமான  விளைவுகள்
திரு. ஆனா தனது அந்தஸ்தைத் துறந்தால், அவர் சந்திக்கப் போகும் பாதகங்கள் ஏராளம்.
1. பாதுகாப்புக் கவசம் இழப்பு (Parte  de Protection):
இதுதான் மிக மோசமான விளைவு. அகதி அந்தஸ்து என்பது வெறும் வதிவிட அட்டை அல்ல; அது ஒரு சர்வதேசப் பாதுகாப்புக் கவசம். இலங்கையில் மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டு, உங்கள் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ ஆபத்து வந்தால், உங்களைக் காக்க பிரான்ஸ் அரசுக்கு எந்தக் கடமையும் இல்லை. நீங்கள் அந்தப் பாதுகாப்பை நிரந்தரமாக இழந்துவிடுவீர்கள்.
2. வதிவிட உரிமையை இழத்தல் (Perte du droit de séjour):
அகதி அந்தஸ்தின் அடிப்படையில்தான் உங்களுக்கு 10 வருட வதிவிட அட்டை வழங்கப்பட்டது. நீங்கள் அந்தஸ்தைத் துறக்கும்போது, உங்கள் வதிவிட அட்டையும் ரத்து செய்யப்படும். நீங்கள் பிரான்சில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் நிலைக்கு (Sans-papiers) தள்ளப்படுவீர்கள்.
3. நிர்க்கதியான நிலை (Situation désespérée):
பிரான்சிலும் சட்டப்பூர்வமாக இருக்க முடியாது; இலங்கையிலும் ஒருவேளை உங்களுக்குப் பழையபடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அங்கும் வாழ முடியாது. இரண்டு நாடுகளிலும் சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஒரு "நிர்க்கதியான" நிலைக்கு இது உங்களைத் தள்ளிவிடும்.
4. பிரெஞ்சு பயண ஆவணத்தை இழத்தல் (Titre de Voyage):
அகதியாக உங்களுக்கு வழங்கப்படும் பிரெஞ்சு பயண ஆவணத்தை (Titre de Voyage) நீங்கள் இழந்துவிடுவீர்கள். இந்த ஆவணம்மூலம், இலங்கை தவிர்த்து உலகின் பல நாடுகளுக்கு நீங்கள் எளிதாகப் பயணிக்க முடியும். இந்த உரிமையும் பறிபோகும்.
5. மீளமுடியாத முடிவு (Décision irréversible):
இது மிக முக்கியம். ஒருமுறை துறந்துவிட்ட அகதி அந்தஸ்தை, "மன்னிக்கவும், நான் தவறு செய்துவிட்டேன், மீண்டும் தாருங்கள்" என்று கேட்க முடியாது. மீண்டும் நீங்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தால், "நீங்களேதான் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறினீர்கள், இப்போது மட்டும் எப்படி ஆபத்து வந்தது?" என்ற அடிப்படையில் உங்கள் கோரிக்கை கிட்டத்தட்ட 100% நிராகரிக்கப்படும்.
சில சந்தர்ப்பங்களில்  OFPRA சிலரது  அகதி அந்தஸ்தைர த்து செய்வதும்உண்டு .நீங்கள் அகதியாக இருக்கும்போது உங்களது செயல்கள் , உங்களைப் பாதுகாக்கவேண்டிய தேவை இல்லை என்று OFPRA கருதினால் (உதாரணமாக, நீங்கள் இலங்கை பாஸ்போர்ட்டைப் பெற்றால், இலங்கை தூதரகத்துக்கு சென்றால் , அகதி அந்தஸ்து இருக்கும் போதே  இலங்கைக்குப் பயணம் செய்தால்), OFPRA உங்கள் அந்தஸ்தைப் பறிக்கலாம். இதன் விளைவுகளும் மேலே உள்ளதை  விட  மோசமானதாக இருக்கும். 
சிவா சின்னப்பொடி