பாரிஸின் இரவைப் பகலாக்கிய ஒளிவெள்ளம்: சாம்ப்ஸ்-எலிசே நட்சத்திரத் திருவிழா தொடங்கியது!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான முதல் மணி பாரிஸில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
பாரிஸின் இரவைப் பகலாக்கிய ஒளிவெள்ளம்: சாம்ப்ஸ்-எலிசே நட்சத்திரத் திருவிழா தொடங்கியது!
உலகின் மிக அழகான வீதி என்று வர்ணிக்கப்படும் பாரிஸின் சாம்ப்ஸ்-எலிசே (Champs-Élysées), நேற்று (ஞாயிறு, நவம்பர் 16) இரவு முதல், விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள் மண்ணில் இறங்கி வந்தது போல ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.
பிரபல நடிகையுமான லியா சேடூ (Léa Seydoux), இந்த ஆண்டிற்கான ஒளித்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பாரிஸ் நகர முதல்வர் ஆன் இடால்கோ (Anne Hidalgo) மற்றும் சாம்ப்ஸ்-எலிசீஸ் குழுவின் தலைவர் மார்க்-அன்டோயின் ஜாமெட் ஆகியோர் முன்னிலை வகிக்க, அந்த மந்திரப் பொத்தான் அழுத்தப்பட்டதும் பாரிஸ் வீதி ஒளிவெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளின் கலை இயக்குநரான தியரி ரெபோல் (Thierry Reboul) மற்றும் வடிவமைப்பாளர் தோமஸ் டெச்சாண்டன் ஆகியோர் இணைந்து, மரங்களிலிருந்து "ஒளி அருவிகள்" (Cascades of Light) கொட்டுவது போன்ற பிரமிக்க வைக்கும் காட்சியை வடிவமைத்துள்ளனர்.
பிரபல பாடகி சார்லோட் கார்டின் (Charlotte Cardin), தனது "Tant pis pour elle" என்ற பாடலைப் பாடி அரங்கத்தை அதிர வைக்க, இசையமைப்பாளர் விக்டர் லு மாஸ்னேவின் (Victor Le Masne) இசைக்கோர்வை பார்வையாளர்களைக் காலத்தை மறந்த நிலைக்கு (Timeless Moment) அழைத்துச் சென்றது.
இந்தக் கண்கவர் காட்சி வரும் ஜனவரி 4, 2026 வரை நீடிக்கும்.
தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை இந்த விளக்குகள் ஒளிரும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 1 மணி வரை நீட்டிக்கப்படும். சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 400 மரங்கள் தங்க நிறத்தில் மின்னும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான முதல் மணி பாரிஸில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த 400 மரங்களும் பொன்னிற ஆடைகளை அணிந்துகொண்டு பயணிகளை வரவேற்கக் காத்திருக்கின்றன!


