Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அதிக சம்பளம் கேட்ட எம்.எஸ்.வி: 5 ஆயிரத்தில் பெரிய ஹிட் கொடுத்த இளையராஜா; இந்த பாட்டை கேளுங்க!

.

எம்.எஸ்.வி அதிக சம்பளம் கேட்டதால், இளையராஜாவிடம் சென்ற தயாரிப்பாளர் தனது முதல் படத்தில் பெரிய ஹிட் பாடலை வாங்கியுள்ளார்.

எம்.எஸ்.வி அதிக சம்பளம் கேட்டதால், இளையராஜாவை புக் செய்த ஒரு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், காலத்தால் மறக்க முடியாத ஒரு பெரிய ஹிட் பாடலை வாங்கியுள்ளார். அது என்ன பாடல், என்ன படம் என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதிய காரைக்குடி நாராயணன், 1978-ம் ஆண்டு அச்சாணி என்ற படத்தை இயக்கி தயாரித்திருந்தார்.

முத்துராமன், லட்சுமி இணைந்து நடித்த இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் எம்.எஸ்.வியிடம் சென்றுள்ளார் காரைக்குடி நாராயணன்.

அப்போது பிஸியாக இருந்த எம்.எஸ்.வி, உங்கள் படத்திற்கு இசையமைக்கிறேன். என்று சொல்லிவிட்டு தனது உதவியாளரை வைத்து சம்பளம் என்ன என்று பேச சொல்லியுள்ளார்.

அப்போது காரைக்குடி நாராயணனிடம் பேசிய எம்.எஸ்.வி உதவியாளர் அண்ணன் இப்போது ரூ40 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். நீங்கள் அந்த சம்பளம் கொடுத்தால் மேற்கொண்டு பேசலாம் என்று சொல்ல, இதனால் அதிர்ச்சியடைந்த காரைக்குடி நாராயணன், நான் பைனான்சியரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, வெளியில் வந்து உடனடியாக இளையராஜாவிடம் சென்றுள்ளார்.

அப்போது அன்னக்கிளி உள்ளிட்ட 2 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த அச்சாணி படம் இவருக்கு 3-வது படம். இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட இளையராஜா என்ன சம்பளம் என்று கேட்க, ரூ5000 என்று சொல்ல, இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுக்க கூடாதா என்று கேட்க, அதன்பிறகு ரூ8 ஆயிரம் சம்பளம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு இந்த படத்தின் கம்போசிங் தொடங்கிய நிலையில், வாலி எழுதிய படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ‘மாதா உன் கோவிலில்’ என்ற பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது.

எம்.எஸ்.வி ரூ40000 சம்பளம் கேட்டதால், இளையராஜாவை புக் செய்த இயக்குனரும் தயாரிப்பளருமான காரைக்குடி நாராயணன், தான் இயக்கிய முதல் படத்திற்காக காலத்தால் அழியாத பாடலை வாங்கியுள்ளார். எஸ்.ஜானகி பாடிய இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்று இன்றும் நிலைத்திருக்கிறது.