.

சுமார் ரூ. 57 இலட்சம் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண்கள் இருவர் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சீனாவைச் சேர்ந்த வர்த்தகப் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சீனாவின் செங்டு நகரிலிருந்து CA-425விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பயணிகளுக்கான “Green Channel” ஊடாக இவர்கள் வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டனர். இதன்போது இவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 38,000 சிகரெட்டுகள் அடங்கிய 190 அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 
கைது செய்யப்பட்டர்கள் தற்போது அவர்கள் சுங்கக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.