15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை கடற்கரையில் குடும்பத்தினர் கண் முன்னே கடல் நீரில் மூழ்கினர்.

மூன்று மாதத்திற்கு முன் மரணித்தாக நினைத்த சிறுவன் உயிருடன்! 
​சுமார் 3 மாதங்களுக்கு முன்பு, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினர் கண் முன்னே நீரில் மூழ்கினர்.  ​சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது சிறுவனைப் பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி, கத்தம் ஓதி துஆவும் செய்தனர்.

​இந்நிலையில், நேற்று அந்த இரண்டாவது சிறுவனின் பெற்றோருக்கு மலேசியாவிலிருந்து ஒரு  தொலை பேசி  அழைப்பு வந்தது. ​கடலில் மயக்க நிலையில் மிதந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை  அவ்வழியால் பயணம் செய்த ஒரு சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக மலேசியாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அவருக்குப் பழைய நினைவுகள் திரும்பியவுடன், அவர் தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.