.

கனடாவில் நேற்று ஏற்பட்ட பனிப்புயலைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக டெல்டா ஏர் லைன்ஸ் விமானம்தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில்திங்கள்கிழமை இந்த விபத்து ஏற்பட்டது. 

இதில் 80 பயணிகளில் 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். 

இவர்கள் இரண்டு பேர் விமானம் மூலம் அவசர சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

காயமடைந்த மீதமுள்ள பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்தை டொராண்டோவின் பியர்சன் விமான நிலையமும் ஒப்புக்கொண்டது.

பாதிக்கப்பட்ட விமான சேவைகள்,

விபத்துக்குள்ளான விமானத்தின் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவை சம்பவ இடத்தில் அவசரகால பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதை காட்டுகிறது. 

அந்த காட்சிகளில் விமானம் தலைகீழாக கிடப்பதையும் காட்டியது. 

விபத்தின் காரணமாக டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தின் வலைத்தளம், வந்து சேரும் மற்றும் புறப்படும் நாற்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக பட்டியலிட்டுள்ளது. 

அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் விமான நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது.