இதே தொடரில், பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
நார்வே செஸ் தொடரில் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி, அபாரமான வெற்றிகளை பதிவு செய்து, உலக டாப் 10 தரவரிசையில் இடம்பிடித்துள்ள பிரக்ஞானந்தா.
1988 ஆம் ஆண்டு விஸ்வநாத் ஆனந்த் இதே சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற போது இந்தியாவே கொண்டாடியது. ஆனால் இன்றைக்கு 17 வயது நிரம்பிய தமிழன் அதைவிட மேலான வெற்றிகளை குவித்து வந்தாலும் வாழ்த்துவதற்கு எவருக்கும் நா வரவில்லை. காரணம் ஆரிய இனவெறி நூலிழையே! இதே தொடரில், பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவ்வளவு இளம் வயதில், வியத்தகு இத்தனை சாதனைகளை படைத்து வரும் இவ்விருவரின் பின்னணியில் இவர்களது தாயாரின் உறுதியும், நம்பிக்கையும் ஒளிர்கிறது. நார்வே தொடரில் மீதமுள்ள போட்டிகளிலும் பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி வாகை சூடிட வாழ்த்துகள்.