இஸ்ரேல் இவர்களை ஒழித்துக்கட்ட விரும்பியது, ஆனால் அவர்களும் ஒழிக்கப்பட்டால் பேசுவதற்கு வேறு தலைமைகள் இல்லை!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஈரானிய பிரதிநிதிகள் மிகவும் விசித்திரமானவர்கள்,  அவர்கள் எங்களிடம் ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறார்கள் . 

அவர்கள் அவ்வாறு செய்வதில் ஆச்சரியம் இல்லை ஏனெனில் அவர்கள் இராணுவ ரீதியாக முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் முன்னேற வாய்ப்பே இல்லை.
ஆனால்  அவர்கள் வெளியில்  ‘நாங்கள் உங்கள் முன்மொழிவை மட்டும் பார்க்கிறோம்’ என்று கூறுகிறார்கள். இது தவறு! அவர்கள் விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும். இல்லையெனில் பின்னர் மீண்டு வர முடியாத நிலை உருவாகும். 

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஈரான்  நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோரைத் தாக்க வேண்டாம் என இஸ்ரேலை வலியுறுத்துமாறு அமெரிக்காவிடம்  பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. 
அதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் அவர்களைத் தனது தாக்குதல் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக ரொய்ட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இவர்களை ஒழித்துக்கட்ட  விரும்பியது, ஆனால் அவர்களும் ஒழிக்கப்பட்டால் பேசுவதற்கு வேறு தலைமைகள்  இல்லை என்பதை  பாகிஸ்தான்  அமெரிக்காவிடம்  குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி Alireza Tangsiri உயிரிழந்துள்ளார் என  'ஜெருசலேம் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையே (IDF) காரணம் என்பதை இஸ்ரேலிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.