பலரும் பல விதமான கதைகளை கூறினாலும் அரசியலமைப்பை மாற்றியமைக்க யாராலும் முடியாது
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: கொள்கை ரீதியில் இணக்கம் என்கிறார் சுரேஷ்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் எனவும் அதனை மாற்ற யாராலும் முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
பலரும் பல விதமான கதைகளை கூறினாலும் அரசியலமைப்பை மாற்றியமைக்க யாராலும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி பொது வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த வடக்கின் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPRLF) தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிலை