உறவுகளை நினைவேந்த நம்மால் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாதா

இழந்த உறவுகளிற்கு நினைவேந்தல் செய்வதற்கு நல்லுரில் அழைப்பு.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ம் ஆண்டை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வுகளை மே 18ம் திகதி நாளை மாலை 05.00 மணிக்கு நல்லூரில் ஒழுங்குபடுத்தியிருக்கிறோம். இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவேந்த நம்மால் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாதா என்ன? குடும்பத்துடன் வாருங்கள்! வரலாறுகளைக் கடத்துவோம் தமிழராய் எழுவோம்!