15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.
மறைக்கப்பட்ட பல உண்மைகளுடன்.
15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. 19.02.2009 அன்று மாலை சுமார் 3 மணி அளவில் நடத்தப்பட்ட நரவேட்டை அது, ரத்தம் சொட்டச் சொட்ட, கதறக் கதற அடி வாங்கி ஓடிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இன்னமும் நீதியைத்தேடி அலைந்தபடி உள்ளார்கள். காவல் துறையினர் தான் அத்துமீறி உள்ளே நுழைந்து வெறியாட்டம் ஆடி முடித்தார்கள். ஆனால் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.
யார் அடித்தது? தெரியாது! அடிக்கச் சொன்னது யார்? தெரியாது! எதற்காக செய்தார்கள் என்பது மட்டும் தெரியும். ஈழத் தமிழர்ளுக்காக போராடாதே - என வழக்கறிஞர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் கலைஞர். அதுவும் மருத்துவமனையில் படுத்து கொண்டு. மறைக்கப்பட்ட பல உண்மைகளுடன், இதுவரை அறிந்திடாத, மறந்து போன அந்த செய்தி. -முனைவர் அரங்க. சம்பத் குமார், வழக்கறிஞர் . உங்களுக்காக... https://youtu.be/JSFYewLiu0o