இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொழுதுபோக்கிற்காக பாடலை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்த திருகோணமலை முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த ஹரிஸ் என்ற நபருக்கு தென்னித்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தமது நிகழ்சி ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. 

கூலித்தொழிலாளியான இவர், தனது வேலைத்தளங்களில் பாடலை பாடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வந்தார். இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் இவருடைய பாடல்களை இணையப்பயனர்கள் அதிகமாகப் பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். 

அதனடிப்படியில் தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் இருந்து பாடுவதற்கான வாய்பை பெற்றுள்ளார்.  

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் என்னடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. 

நான் தற்போது பாடிப்பாடி வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். 

என்னுடைய கஸ்ரங்கள், துன்பங்கள், கவலைகளை மறப்பதற்காக பாடிப்பாடி வேலை செய்து கொண்டிருந்த போது என்னுடைய பாடல் ஒரு TikTok இல் போட்ட போது அந்த வீடியோ  வைரலாகியது. இதனால் தற்போது சீ தமிழில்

பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நானும் எனது நண்பரும்   கொண்டாட்டங்களில் பாடி வந்தோம். ஆனால் எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.