தேர்தல் ஆணைக்குழுத் தலைவரினால் (09) வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள அறிக்கை.

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தல் 17 செப்டம்பர் 2024 க்கும் 16 அக்டோபர் 2024 ஆம் திகதிக்குமிடையில் நடத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவரினால் (09) வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசியலமைப்பிலும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித்தேர்தகள் சட்டத்திலும் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உரிய காலப்பகுதியினுள் பெயர் குறித்த நியமனம் கோரப்படும் என்பதும் தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களுக்கு அமைய 17 செப்டம்பர் 2024 கிற்கும் 16 அக்டோபர் 2024 ஆம் திகதிக்குமிடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்படுகின்றது.