.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பரிமாறப்பட்டுள்ளது.

இதன்படி, இரட்டை வரி விதிப்பைத் தடுக்கவும்,  இலங்கை சிவில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கவும் இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டுள்ளது

இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மற்றும் இரு நாடுகளின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுடிருந்தனர்.

அத்துடன்  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்றுவருக்கின்றது.