.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.
மேலும் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நேற்று (27) அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.மேஜர் விநோதரனின் (பாலசுந்தரம் அஜந்தன்) தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர் தூவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.