.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டியிருந்தால், முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுகுறித்து மக்கள் பதற்றமடையவோ அல்லது சந்தேகமோ கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சில வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் நடைபாதையாக கொண்டு வர வேண்டியுள்ளது.
அதன் காரணமாக, ஒட்டுமொத்த முடிவைக் கணக்கிட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படலாம். முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மக்கள் மத்தியில் பல்வேறு பொய் பிரசாரங்களை பரப்பலாம்.
அங்கு அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு பெரிய பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களை அமைதியாக வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.