Breaking News
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மோசடித்தனம்; வரலாற்றைத்திரித்து ஈ.வெ.ராமசாமி என்ற ஈனப்பிறவி செய்த பித்தலாட்டம் இது!
.
வரலாற்றைத்திரித்து ஈ.வெ.ராமசாமி என்ற ஈனப்பிறவி செய்த பித்தலாட்டம் இது!
"தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று தியாகராய செட்டியார் எனும் தெலுங்கரும், மாதவன் நாயர் எனும் மலையாளியும்தான் வந்தார்கள்; தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக கன்னடனாகிய நான் போராடினேன், எந்த தமிழர் தலைவர் வந்தார்?" எனக் கேட்கிறார் ஈ.வெ.ராமசாமி.
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற மோசடித்தனமில்லையா இது?
தியாகராய செட்டியாரையும், மாதவன் நாயரையும் இணைத்து நீதிக்கட்சி தொடங்க அடித்தளமிட்டவர் நடேசனார் எனும் பச்சைத்தமிழர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென 'திராவிட இல்லம்' எனும் விடுதியை இலவசமாக நடத்தி உணவளித்தப் பெருந்தகை; வகுப்புரிமைக்காக இயக்கம் வேண்டுமென உழைத்திட்ட முழுமுதற்செயல்பாட்டாளர்!
அந்த நடேசனாரின் முன்முயற்சியால்தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது; அவர்தான் மூலவர். அவர் தமிழரெனும் ஒற்றைக்காரணத்திற்காகவே, அவருக்கு முதலமைச்சர், அமைச்சர், சென்னை மாநகரத் தந்தை என எந்தப் பொறுப்பும் அளிக்கப்படாது மறுக்கப்பட்டதென்பதும், அவரை தியாகராயரே தோற்கடிக்க வேலைசெய்தார் என்பதும், நீதிக்கட்சியிலிருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் தனிக்கதை.
நடேசனார் எனும் தமிழர் பெருமுயற்சி எடுத்து, 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கும்போது ஈனப்பிறவி ஈ.வெ.ராமசாமி அரசியலுக்கே வரவில்லை. உண்மை இவ்வாறிருக்க, தமிழர்களின் உரிமைகளை மீட்க எந்த தமிழர் தலைவர் வந்தார்? எனப் பொத்தாம் பொதுவாக எள்ளல் செய்திருப்பது ஈ.வெ.ராமசாமியின் காழ்ப்புணர்வா? இல்லை, தான்தான் எல்லாமே என்ற கர்வமா?
இனிமேலும் ஈ.வெ.ராமசாமியை தூக்கி வைத்து கொண்டாடுபவர்களும், திராவிடத்தை முன்மொழிந்து பேசுபவர்களும் தமிழ்த் தேசியவாதிகள் அல்ல; அவர்கள் தமிழ்த் தேசிய வியாதிகள்.
முகநூல் பதிவு.